பின்வரும் தகவல்களை கவனமாகப் படித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளிக்கவும்.
மென்பொருள் நிறுவனம் ஒன்று பொறியாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. பின்வரும் அளவுகோல்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஒரு தேர்வர் பின்வரும் அளவுகோள்களைக் கொண்டிருக்க வேண்டும்:
(i) பட்டப்படிப்பில் குறைந்தது 75% மதிப்பெண்களுடனும், எச்.எஸ்.சி.யில் 80% மதிப்பெண்களுடனும் பொறியியல் பட்டதாரியாக இருக்க வேண்டும்.
(ii) குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
(iii) மூன்று வருடப் பத்திரத்தில் கையெப்பமிட தயாராக இருக்கவேண்டும்.
01.02.2017 தேதியின்படி 28 வயதுக்கு மிகாமலும், 21 வயதுக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
இருப்பினும், தேர்வர் மேற்கூறிய அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்தால்:
(a) (i), ஆனால் பட்டப்படிப்பில் 50% மற்றும் எச்.எஸ்.சி.யில் 70% பெற்றிருந்தால், குறைந்தது மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருந்தால், அவர் இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படலாம்.
(b) (iii), ஆனால் அவர் வெளியேற வேண்டியிருந்தால் ரூ. 1 லட்சம் தொகையை செலுத்த தயாராக இருந்தால், இந்த வழக்கு தலைவருக்கு அனுப்பப்படலாம்.
(c) (ii), ஆனால் ஒரு கணினி பொறியியலாளர், இந்த வழக்கு டி.ஜி.எம்.க்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்.
கீழே உள்ள கேள்வியில், ஒரு தேர்வர் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் மேலே கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் துணை நிபந்தனைகளின் அடிப்படையில் விருப்பங்களில் பட்டியலிடப்பட்டுள்ள நடவடிக்கைகளில் ஒன்றை நீங்கள் எடுக்க வேண்டும். குறிப்பு தேதி 1.2.2017 ஆகும். கேள்வியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைத் தவிர வேறு எதையும் நீங்கள் கருதக்கூடாது.
இயந்திர பொறியாளரான திவ்யா, கடந்த ஓராண்டாக உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இளங்கலை மற்றும் எச்.எஸ்.சி.யில் முறையே 82% மற்றும் 87% மதிப்பெண்கள் பெற்றார். இவருக்கு இப்போதுதான் 25 வயதாகிறது.