இந்த கேள்வியில், ஒரு பத்தியைத் தொடர்ந்து ஒரு கூற்று கொடுக்கப்பட்டுள்ளது. பத்தியை கவனமாகப் படித்து, கொடுக்கப்பட்ட பத்தியின் அடிப்படையில் கூற்றை மதிப்பிடுக.
மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு சீனா ஒரு தேசிய உத்தியை உருவாக்கியது. இதன் கீழ், நிலக்கரியை பயன்படுத்துவதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்தனர். அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டன, மக்கள் வீட்டு உபயோகத்திற்கு கூட நிலக்கரியை எரிக்க அனுமதிக்கப்படவில்லை. மேலும், வாகன உமிழ்வுக்கான விதிமுறைகளை உருவாக்குவதைத் தவிர, காற்று மாசுபாட்டைக் கட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் PM 2.5 வாகன உமிழ்வு காரணமாக சீனாவில் 1,37,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெய்ஜிங்கின் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது என்பது சரிதான் என்றாலும், அரசாங்கம் அதன் இலக்குகளை அடைவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. 338 சீன நகரங்களில் 231 நகரங்களில் மாசுபாடு குறையவில்லை என்பதை சீன அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இதை முறியடிக்க, மற்றொரு மூன்று ஆண்டு பணி உத்தி தயார் செய்யப்பட்டுள்ளது.
கூற்று:
மாசுபாட்டைக் கட்டுப்படுத்த சீனாவில் அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டன.
A - கூற்று நிச்சயமாக சரியானது எனில்,
B - கூற்று ஒருவேளை சரியானது எனில்,
C - கூற்றை தீர்மானிக்க இயலாதெனில்,
D- கூற்று நிச்சயமாக தவறானது எனில்.